ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஷ்ரத்தா வாக்கரின் எலும்புகள் ரம்பத்தால் வெட்டப்பட்டன: கூறாய்வில் தகவல்

ஷ்ரத்தா வாக்கரின் எலும்புகள் ரம்பத்தால் வெட்டப்பட்டதை கூறாய்வு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜனவரி 2023, 9:48 am

புது தில்லி: புது தில்லியில் கொலை செய்யப்பட்டு, பல துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வீசப்பட்ட சம்பவத்தில், ஷ்ரத்தா வாக்கரின் எலும்புகள் ரம்பத்தால் வெட்டப்பட்டதை கூறாய்வு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்களைத் தேடிய காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் கண்டுபிடித்த 23 மனித எலும்புத் துண்டுகளை கூறாய்வு சோதனைக்கு அனுப்பியதில், ஷ்ரத்தாவின் எலும்புகள் ரம்பத்தைக் கொண்டு வெட்டப்பட்டதை உறுதி செய்துள்ளன.

முன்னதாக, ஷ்ரத்தா வாக்கரின் உடல்களை ரம்பத்தைக் கொண்டு வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எலும்புத் துண்டுகளின் கூறாய்வுகள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாயன்று நடத்தப்பட்டுள்ளது. கூறாய்வில் கிடைத்த முடிவுகள் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதால், விரைவில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.