தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயிலின் மீது கல் வீசி தாக்குதல்!

விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டியின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

News image
Updated On :12 ஜனவரி 2023, 10:59 am

விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டியின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கியதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15-ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். 

ரயில் பாதுகாப்புப் படையினரின் முதற்கட்ட விசாரணையில், 

புதன்கிழமை இரவு காஞ்சரபாலத்தில் உள்ள கோச் வளாகத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். இதனால் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

பராமரிப்பு சோதனைக்காக வந்தே பாரத் ரயில் புதன்கிழமை சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வந்தது. விசாகப்பட்டினம் வந்தவுடன், ரேக் கஞ்சரபாலத்தில் உள்ள புதிய கோச் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்த சம்பவம் நிகழ்ந்தாக  போலீஸார் தெரிவித்தனர். 

இந்த  சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் மற்றும் ஆர்பிஎப் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. ஒரு ஜன்னல் கண்ணாடி முழுவதுமாக உடைந்த நிலையில், மற்றொரு கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

குற்றத்தை செய்த நபர்களைத் தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.