ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கோழிக்கறி போடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில்.. மதிய உணவில் பாம்பு

கோழிக்கறி சேர்க்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பள்ளி ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

News image

கோழிக்கறி போடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில்.. மதிய உணவில் பாம்பு

Updated On :12 ஜனவரி 2023, 11:26 am


பிர்பம்: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய சத்துணவில் கோழிக்கறி சேர்க்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பள்ளி ஒன்றில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மிகவும் மோசமான இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாம்பு இருந்த பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

53 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் 20 பேர் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். பாத்திரங்களை கழுவும் போது உணவில் செத்துப்போன பாம்பு இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதற்குள் மாணவ, மாணவிகள் சிலர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் பள்ளி முன்பு திரண்ட கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரின் காரை அடித்து சேதப்படுத்தினர்.  இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து கிராம மக்களிடமிருந்து தலைமை ஆசிரியயை பத்திரமாக மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.