பெங்களூருவில் ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உரையாற்ற உள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் ராமநகரா மற்றும் மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த ஜேடி(எஸ்) தலைவர்களான விஸ்வநாத் மற்றும் ராதாகிருஷ்ணா ஆகியோரை அவர்களது ஆதரவாளர்களுடன் சேர்த்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கேபிசிசி தலைவர் பேசினார்.
அவர் கூறுகையில்,
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பெண்களுக்கான தனி அறிக்கையை கட்சி திட்டமிட்டு வருவதாகவும், காங்கிரஸின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் உத்தரவாத கடிதத்தை வெளியிட விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மக்கள்தொகையில் 50 சதவீத பெண்கள், வாழ்வில் முன்னேற்றம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பெண்களுக்காக தனி அறிக்கை தயாரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மேலும் அவர்களிடையே தலைமைத்துவத்தை உருவாக்கி அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான காங்கிரஸின் திட்டங்களை முன்னிலைப்படுத்திய அவர், தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அறிக்கையுடன் பெண்களுக்கான "உத்தரவாத கடிதத்தை" வெளியிட விரும்புவதாகவும், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி வரை அனைத்து தலைவர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட உள்ளது.
மேலும், ஜனவரி 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பஞ்சாயத்து மற்றும் சமூக மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலான பெண் தலைவர்களின் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநிலத்திற்கு பிரியங்கா காந்தியின் முதல் அரசியல் வருகை இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


