தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடும் குளிர்: தில்லி மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வெந்நீர்! 

தில்லியில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக 16 மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் குளிப்பதற்கும், சுகாதாரத் தேவைகளுக்கும் வெந்நீர் வழங்கப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2023, 12:40 pm

தில்லியில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக 16 மத்தியச் சிறைகளில் உள்ள கைதிகள் குளிப்பதற்கும், சுகாதாரத் தேவைகளுக்கும் வெந்நீர் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. 

திகார், மண்டோலி மற்றும் ரோகிணி உள்பட தில்லியில் உள்ள 16 சிறைகளில் இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.  கூடுதலாக 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் ஒரு மரக் கட்டில் மற்றும் ஒரு மெத்தை வழங்கப்படுகிறது. 

சிறைக் கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறைகளுக்கான ஆய்வுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா கூறியுள்ளார். 

மேலும், விசாரணைக் கைதிகளுக்கு வெந்நீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படாது. செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு வெந்நீர் ஒரு வாளிக்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார். 

உள்துறை செயலாளர் உடனடியாக அனைத்து கைதிகளுக்கும் சுடுநீர் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக வயதானவர்களுக்கு எலும்பியல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.