ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து

ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

News image

ராகுலின் நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி வாழ்த்து

Updated On :3 ஜனவரி 2023, 8:08 am


அயோத்தி: ஆச்சரியமளிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்துக்கு அயோத்தி ராமர் கோயிலின் தலைமை ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. 

இந்த நிலையில், "நீங்கள் இந்த நாட்டுக்காக செய்யும் அனைத்துப் பணியும் அனைவரின் நலத்துக்காகவே. எனது வாழ்த்துகள் எப்போதும் உங்களுக்கு" என்று சத்தியேந்திர தாஸ் எழுதிய கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் அளித்துள்ளார்.

மேலும், "கடவுள் ராமரின் அருளாசியும் எப்போது உன்னுடன் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஹனுமன் கோயில் பூசாரி ராஜூ தாஸ் கூறுகையில், இது அவரது தனிப்பட்ட கருத்து. அவரது கருத்துடன் ஒத்துப்போக முடியாது. காங்கிரஸ் எப்போதுமே இந்து மதத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.