ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள்: எய்ம்ஸ்

2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் பதிவாகும் என்றும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வினை மேற்கோள்காட்டி  எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள்: எய்ம்ஸ்

Updated On :4 பிப்ரவரி 2023, 12:29 pm


புது தில்லி: வரும் ஆண்டுகளில் புற்றுநோய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், 2026ஆம் ஆண்டில் 20 லட்சம் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் பதிவாகும் என்றும் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வினை மேற்கோள்காட்டி  எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லி - எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் புற்றுநோயியில் அறுவைசிசிச்சை நிபுணர் டாக்டர் எஸ்விஎஸ் டியோ கூறுகையில், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது ஆண்டுதோறும் 13 - 14 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதித்து வருகிறது. இது 2026ஆம் ஆண்டில் 20 லட்சத்தைத் தொடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கொள்கை இடைவெளியை மூடுதல் என்பதே. புற்றுநோய் தொடர்பாக இருக்கும் ஏராளமான மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து, இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்த முடியும் என்பதை மக்களிடையெ எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.