/

பிறந்தது ஆங்கில புத்தாண்டு: கொண்டாட்டத்தில் மக்கள்!

புத்தாண்டு பிறந்ததையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:27 pm

DIN

தில்லி காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசாம்பிதமும் ஏற்படாதிருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2,500-க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 10 ஆயிரம் காவலர்கள் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் திரள் கூடும் இடங்களில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து புத்தாண்டை கொண்டாடும் முதல் நாடாக இருக்கிறது. இதனையடுத்து ஒவ்வொரு நாடாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் 

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் 

இந்தியாவில் புத்தாண்டு பிறந்ததையொட்டி பொது மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மெரினாவில் பொது மக்கள்... 

மெரினாவில் பொது மக்கள்... 

சென்னை மெரினா கடற்கறையில் பொதுமக்கள் பாதுகாப்பாக கூடி புத்தாண்டினை கொண்டாடி வருகின்றனர்.

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள்...

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.