எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன்; உயிரைக் கொடுக்கவும் தயார் - மம்தா பானர்ஜி

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப் பேசியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

DIN

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப் பேசியுள்ளார். 

கொல்கத்தாவில் ரமலான் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'வங்காளத்தில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்நாளில் ஒன்று சொல்கிறேன்,  நாட்டைப் பிரிக்க விடமாட்டேன். நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட தரத் தயாராக இருக்கிறேன். 

யாரோ ஒருவர், பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிப்பதாகச் சொல்கிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பாஜகவுக்கு பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை என்பதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் என்று பாருங்கள். 

ஜனநாயகம் ஒழிந்தால் எல்லாம் போய்விடும். இன்று அரசியல் சட்டம் மாற்றப்படுகிறது, வரலாறு மாற்றப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தார்கள்; அதை செய்ய விடமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். அதுபோல இந்த நாட்டை பிரிக்கவும் அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.