குவகாத்தி: நாட்டில் முதல் இண்டேன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடங்கி சுமார் 57 ஆண்டுகளுக்குப் பின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் விஜயநகர் என்ற கிராமத்துக்கு தற்போதுதான் முதல் முறையாக எரிவாயு உருளை விநியோகம் நடைபெற்றுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் விஜயநகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தை அடைய 157 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணிக்க வேண்டும்.
இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
இப்பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்புதான் சங்லாங் மாவட்டம் மியோ துணை மண்டலத்திலிருந்து 15 குடும்பங்களுக்கு எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனை திருவிழாவாகக் கொண்டாடியுள்ளனர் உள்ளூர் மக்கள்.
இந்த ஊர்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியிருப்பதாக அமைச்சர் கம்லங் மோசாங் தெரிவித்துள்ளார். இதுநாள் வரை அவர்கள் விறகுகளை வைத்து அடுப்பில்தான் சமைத்து வந்தனர். இதனால், மழைக்காலங்களில் பெண்கள் படும் துயரத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. இதனால், மக்களின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி மக்கள் பலருக்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எரிவாயு உருளைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களது ஆவணங்கள் உரிய அதிகாரிகளைச் சென்றடையவே பல நாள்கள் ஆகும். ஒரு வங்கிப் பணப்பரிமாற்றத்துக்குக் கூட இங்கு பல நாள்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது என்கிறார் கேஸ் ஏஜென்ஸி நிர்வாகி அந்து.
2020ஆம் ஆண்டு இக்கிராமத்துக்கு பிஎஸ்என்எல் வசதி வந்தாலும், ஒருவர் தொலைபேசியில் அழைக்கவோ, அழைப்பை எடுக்கவோ நிச்சயம் அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

