பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு-காஷ்மீரின் 70 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் ஒரேயொரு குழந்தைகள் மருத்தவமனை ஜிபி பந்த் மருத்துவமனைதான். இங்கு கடந்த ஜனவரி 1 முதல் மே 18 வரை 358 குழந்தைகள் மரணமடைந்துள்ளன.

News image

ஜம்மு-காஷ்மீரின் 70 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

Updated On :23 செப்டம்பர் 2022, 12:47 pm


ஸ்ரீநகர்: 2012ஆம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில் இருந்த ஒரேயொரு குழந்தைகள் மருத்துவமனை ஜிபி பந்த் மருத்துவமனைதான். இங்கு அந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் மே 18 வரை 358 குழந்தைகள் மரணமடைந்துள்ளன.

பிறந்த குழந்தைகளின் மரண விகிதம் கடுமையாக இருந்ததால், ஜம்மு - காஷ்மீருக்கு புதிதாக 500 படுக்கை வசதிகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனை ஸ்ரீநகரில் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த மாநில முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா அறிவித்தார்.

ஸ்ரீநகரின் பெமினா பகுதியில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கை வசதிகள் மற்றும் குழந்தைகள் பிரிவில் 250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்தவமனைக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளாக, அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

அதன்பிறகு, அரசின் தலைமைகள் மாறும்போது காட்சிகள் மாறியதே தவிர, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கி, நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி முறைப்படி துவக்கிவைக்கப்படுகிறது. முதல் வாரத்தில் இங்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு, உள்நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜம்மு -காஷ்மீரின் 70 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.