தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எங்க ஏரியா.. உள்ள வராத.. ஜார்க்கண்ட் எல்லையில் காவல் நிற்கும் பெண்கள்

இங்கே ஜார்க்கண்ட் கிராமத்திலும் எல்லைப் பாதுகாப்பை மக்கள் தீவிரமாகக் கருதி, ஒவ்வொரு எல்லையிலும் பெண்கள் காவல் காக்கிறார்கள்.

News image

எங்க ஏரியா.. உள்ள வராத.. ஜார்க்கண்ட் எல்லையில் காவல் நிற்கும் பெண்கள்

Updated On :16 செப்டம்பர் 2022, 11:13 am


ராஞ்சி: ஒரு நாட்டுக்குத்தான் எல்லைப் பாதுகாப்பு அவசியம் என்று நினைக்கவேண்டாம். இங்கே ஜார்க்கண்ட் கிராமத்திலும் எல்லைப் பாதுகாப்பை மக்கள் தீவிரமாகக் கருதி, ஒவ்வொரு எல்லையிலும் பெண்கள் காவல் காக்கிறார்கள்.

பிகார் - ஜார்க்கண்ட் எல்லைப் பகுதி கிராமங்களின் ஒவ்வொரு மூளைமுடுக்குகளிலும் அந்தந்த கிராமப் பெண்கள் கையில் தடியுடன், வெளியாட்கள் தங்கள் கிராமத்துக்குள் நுழைந்து உலாவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால், அந்த மாநில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அருகிலிருக்கும் ஜார்க்கண்ட்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். இதனால், தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனைத் தடுக்க பெண்களே களத்தில் இறங்கியுள்ளனர்.

பிகாரிலிருந்து மதுவுக்கு அடிமையான ஆண்கள் எங்கள் கிராமத்துக்குள் நுழைவதால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இதனால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனைத் தடுக்க பெண்களே தங்கள் கிராமப் பாதுகாப்பை கையிலெடுத்துக் கொண்டுள்ளனர்.

இரவு பகல் பாராமல், பெண்களே தங்களுக்குள் குழு அமைத்து, 24 மணி நேரமும் எல்லையில் கண்காணிப்பை மேற்கொள்கிறார்கள். மதுகுடிக்க வரும் பிகார் குடிமகன்களை, இங்கே மதுபானம் கிடைக்காது என்று கூறி அவர்களே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். பெரிய அளவில் பெண்கள் கூட்டம் கையில் கம்புகளுடன் நிற்பதால் வேறு வழியின்றி ஆண்கள் திரும்பிச் சென்று விடுவதாகவும், தற்போது கிராமத்தில் அமைதியாக வாழ்வதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.