மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில், மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புத்தகப் சுமையைக் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.30 லட்சம் மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை புத்தகப் பைகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வகுப்பிற்கு ஏற்றாற்போல் புத்தகப் பையின் எடைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 அன்று மத்திய பள்ளிக் கல்வித் துறையின் துணைச் செயலர் பிரமோத் சிங் வெளியிட்ட சுற்றக்கையில்,
அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் அடுத்த மூன்று மாதங்களில் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, புதிய விதிமுறைகளின் படி புத்தகப் பைகளின் எடை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய வழிகாட்டுதல்களின்படி, கணினி, மாடல் சயின்ஸ், பொது அறிவு, விளையாட்டு, உடற்கல்வி, சுகாதாரம் மற்றும் கலை போன்ற பாடங்களை புத்தகங்கள் இல்லாமல் கற்பிக்கப் பள்ளிகளுக்கு வழிகாட்டியுள்ளது.
மேலும், மாநில அரசு மற்றும் என்சிஇஆர்டி நிர்ணயித்த புத்தகங்களைத் தவிர வேறு எந்தப் புத்தகங்களையும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
புதிய திட்டத்தின்படி, 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 கிலோ முதல் 2.2 கிலோ எடையுள்ள பள்ளிப் பைகளையும், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் 1.7 கிலோவிலிருந்து 2.5 கிலோ வரையிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 கிலோ எடையுள்ள பள்ளிப் பைகளையும், 8ஆம் வகுப்பு 2.5 கிலோவிலிருந்து 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 2.5 கிலோவிலிருந்து 4.5 கிலோ வரையிலும் புத்தகப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்றவாறு புத்தகப் பைகளின் எடையைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


