நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

காஸியாபாத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

News image
காஸியாபாத்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:37 am

PTI


புது தில்லி: காஸியாபாத்தில், 38 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் செய்த கொடுமை நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

தில்லியைச் சேர்ந்த பெண் கடத்தப்பட்டு, 2 நாள்களுக்குப் பின் ஒரு கோணிப்பையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாலையோரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து மகளிர் ஆணையம் காவல்துறையினருக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸில், கடந்த 16ஆம் தேதி தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல காஸியாபாத்தில் ஆட்டோ ரிக்சாவுக்காக காத்திருந்த போது, அவ்வழியாக வந்த நான்கு பேர் காரில் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் மேலும் ஒருவரும் சேர்ந்து அப்பெண்ணை இரண்டு நாள்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி நுழைக்கப்பட்டிருந்தது.அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதன் நகல் மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மகளிர் ஆணையம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க, மிகவும் பாதிக்கத்தக்கதாக அமைந்துவிட்டதாகவும், பெண்ணுக்கு குற்றவாளிகள் செய்த கொடுமைகள் நிர்பயா சம்பவத்தையே நினைவுபடுத்துவதாகவும் மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் பெண்களும் குழந்தைகளும் இதுபோன்ற மிகக் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டும் என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.