புது தில்லி: தக் தக் கேங் என்று தில்லி காவல்துறையினரால் குறிப்பிடப்படும் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கார் கதவை இரண்டு முறை தட்டி, ஓட்டுநர்களின் கவனத்தை திசைதிருப்பி, அவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதாவது தீனதயாளன் (24), ராஜூ (54), கருப்பசாமி (37), மூர்த்தி (24) ஆகியோர் தில்லியில் உள்ள ஷகுர்புர் பகுதியில் வசித்து வருவரும், அவர்களது பூர்வீகம் தமிழகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், புது தில்லியில் இதுவரை பதிவான வாகனக் கொள்ளை தொடர்பான நான்கு வழக்குகள் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நான்கு பேரில் தீனதயாளன் தமிழ் திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் என்றும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இவர்களைக் கைது செய்த தனிப்படையினர், கொள்ளைச் சம்பவம் நடந்த ஒவ்வொரு பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கியிருக்கிறது.
இவர்களிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தெரிய வரலாம் என்றும் காவல்துறையினர் கருதுகிறார்கள்.
கொள்ளையடிப்பதில் புதிய முறையை இவர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் ஓடும் காருக்கு அருகே சென்று கண்ணாடியை இரண்டு முறை தட்டிவிட்டு மறைந்துவிடுவார்கள். காருக்கு என்ன நடந்ததோ என்ற பதற்றத்தில் கார் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்கும் அந்த நொடிக்குள், இந்த கும்பலைச் சேர்ந்த சிலர் காருக்குள் இருக்கும் பொருள்களை கொள்ளையடித்துக் கொண்டு மறைந்து விடுவார்கள் என்று காவலர்கள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

