கொல்கத்தா: புது தில்லி - ஹௌரா இடையேயான துரந்தோ ரயிலில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ராஜதானி உள்ளிட்ட ரயில்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டர்களின் பாதுகாப்பு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று, பிகாரில், ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் துரந்தோ ரயிலில் ஏறி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளைச் சம்பவம் நடந்த இந்த ரயிலுக்கு அரசு ரயில்வே காவலர்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் நள்ளிரவு 1 மணிக்கே பாட்னா ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பட்னா ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நேரத்தில் 20 பேர் ஆயுதங்களுடன் ரயிலுக்குள் ஏறி, துப்பாக்கி முனையில் 7 முதல் 8 ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளின் பொருள்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
துரந்தோ ரயிலிலேயே இப்படி நடந்தால், மற்ற ரயில்களின் பாதுகாப்பு என்ன நிலை என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
மத்திய அரசைக் கேட்டால், ஒவ்வொரு மாநிலத்தில் பயணிக்கும் ரயிலுக்கும் மாநில அரசுகள்தான் பாதுகாப்பளிக்க வேண்டும் என்கிறது. ஆனால், மாநில அரசுகளோ, அந்த அளவுக்கு தங்களிடம் போலீஸ் பலம் இல்லை என்கிறார்கள். இப்படி இரு தரப்பும் சொன்னால், பயணிகளின் பாதுகாப்புத்தான் கேள்விக்குறியாகிறது என்று புலம்புகிறார்கள் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


