மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

துரந்தோ ரயிலில் கொள்ளை: குறிப்பிட்ட ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டம்

ராஜதானி உள்ளிட்ட ரயில்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டர்களின் பாதுகாப்பு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

News image

துரந்தோ ரயிலில் கொள்ளை: குறிப்பிட்ட ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டம்

Updated On :17 அக்டோபர் 2022, 12:51 pm


கொல்கத்தா: புது தில்லி - ஹௌரா இடையேயான துரந்தோ ரயிலில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ராஜதானி உள்ளிட்ட ரயில்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டர்களின் பாதுகாப்பு வழங்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று, பிகாரில், ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் துரந்தோ ரயிலில் ஏறி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளைச் சம்பவம் நடந்த இந்த ரயிலுக்கு அரசு ரயில்வே காவலர்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் நள்ளிரவு 1 மணிக்கே பாட்னா ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்னா ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நேரத்தில் 20 பேர் ஆயுதங்களுடன் ரயிலுக்குள் ஏறி, துப்பாக்கி முனையில் 7 முதல் 8 ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகளின் பொருள்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

துரந்தோ ரயிலிலேயே இப்படி நடந்தால், மற்ற ரயில்களின் பாதுகாப்பு என்ன நிலை என்று மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மத்திய அரசைக் கேட்டால், ஒவ்வொரு மாநிலத்தில் பயணிக்கும் ரயிலுக்கும் மாநில அரசுகள்தான் பாதுகாப்பளிக்க வேண்டும் என்கிறது. ஆனால், மாநில அரசுகளோ, அந்த அளவுக்கு தங்களிடம் போலீஸ் பலம் இல்லை என்கிறார்கள். இப்படி இரு தரப்பும் சொன்னால், பயணிகளின் பாதுகாப்புத்தான் கேள்விக்குறியாகிறது என்று புலம்புகிறார்கள் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.