நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

News image
புல்வாமாவில் நடந்த சம்பவம்: தவறுதலாக வெடித்த துப்பாக்கி; ஒருவர் பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:29 am

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி கையில் இருந்த துப்பாக்கி, எதிர்பாராதவிதமாக சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.

ஆசிஃப் அகமது பட்ரூ என்ற 25 வயது இளைஞர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தார். புல்வாமா மாவட்டம் ஹால் பகுதியில், காவலரின் பாதுகாப்புத் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததும் உடனடியாக பட்ரூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.