மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எய்ம்ஸ் புறநோயாளிகளின் கவலையைப் போக்க புதிய வசதிகள்

புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

தில்லி எய்ம்ஸ் (கோப்புப்படம்)

Updated On :4 அக்டோபர் 2022, 8:30 am

புது தில்லி: புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே ஊழியர்கள் வேலை செய்வதால், புறநோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அக்டோபர் 16ஆம் தேதி முதல், நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக வைத்த வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதலாக 50 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதுபோல, அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கேயே நுழைவுப் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.