நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஆகஸ்ட் மாதத்தை விட 26 சதவீதம் உயர்ந்து ரூ.1.47 லட்சம் கோடியாக உள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:28 am

PTI

புது தில்லி: நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஆகஸ்ட் மாதத்தை விட 26 சதவீதம் உயர்ந்து ரூ.1.47 லட்சம் கோடியாக உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் ரூ.1,47,686 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 ஆகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி  ரூ.80,464 கோடியாகவும், செஸ் வரி ரூ.10,137 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.