தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு: சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு மேலும் நான்கு வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு

News image
வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு: சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:52 am

PTI

வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடா்பாக பதிலளிக்க சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு மேலும் நான்கு வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.அர். கவாய், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை அடுத்த 6 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ஆர்பிஐக்கு அக்டோபர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கிங்ஃபிஷா், மகாராஷ்டிர வங்கி, யெஸ் வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களின் வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்படவில்லை.

இந்திய ரிசா்வ் வங்கிச் சட்டம், வங்கி ஒழுங்காற்றுச் சட்டம், பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் உள்ளிட்டவற்றை மீறும் வகையில், அவா்கள் செயல்பட்டுள்ளனா். எனவே வங்கி மோசடிகளில் ரிசா்வ் வங்கி அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.