தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

புதிய யுக்தியை கையாள்கிறதா பாஜக? குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பாவேஷ் கத்தாரா பதவி விலகினாா். அவா் இன்றே பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
புதிய யுக்தியை கையாள்கிறதா பாஜக? குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா
Updated On :1 பிப்ரவரி 2024, 10:48 am

PTI


ஆமதாபாத்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ பாவேஷ் கத்தாரா பதவி விலகினாா். அவா் இன்றே பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் மூன்றாவது எம்எல்ஏவாக இவர் உள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர் புதன்கிழமை இரவு, தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான மோகன்சிங் ரத்வா பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.  புதன்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மற்றொரு எம்எல்ஏ பகவான் பரத் பதவி விலகிய அடுத்த சில மணி நேரத்திலேயே பாஜகவில் இணைந்தாா்.

இந்த நிலையில், இன்று மூன்றாவதாக ஒரு எம்எல்ஏ ராஜிநாமா செய்து, இன்றே பாஜக பக்கம் செல்வார் என்று கூறப்படுவது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலில் ஆளும் பாஜகவுக்குதான் வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இந்நிலையில், எதிா்க்கட்சியான காங்கிரஸில் இருந்து எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் பலா் பாஜகவில் இணைவது தொடா்கதையாகி வருகிறது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக இதுவரை மேற்கொண்டு வந்த யுக்தியை சற்று புதுவிதமாகமாற்றி, தற்போது தேர்தலில் வெற்றி பெற புதிய யுக்தியை கையாள்வதாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவி விலகல் கடிதத்தை குஜராத் ஆளுநரிடம் அளித்திருக்கும் தகவலை, புகைப்படம் மற்றும் விடியோவுடன் பல பாஜக தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.