நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கண்களை பாதுகாக்க மிக எளிய பயிற்சி: சொல்லிக் கொடுக்கிறார் ஷில்பா ஷெட்டி

யோகா விடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.

News image

'கண்கள் நமது பொக்கிஷங்கள்': பாதுகாக்கும் பயிற்சியை சொல்லிக் கொடுக்கும் ஷில்பா ஷெட்டி

Updated On :7 நவம்பர் 2022, 9:17 am


சென்னை: அவ்வப்போது உடல்நலன் தொடர்பாகவும், யோகாசனங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி, யோகா விடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.

இன்று அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், கண்கள் நமது பொக்கிஷங்கள். அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணினி உள்ளிட்டவற்றை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவற்றை வராமல் தடுக்க சில பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாள்தோறும் சில நிமிடங்கள் ஒதுக்கி, நேத்ரா யோகா செய்வதன் மூலம், நமது கண்கள் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து செய்யும் போது கண்களின் பார்வை அதிகரிக்கும். கணினி போன்ற திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட சரியாகி, நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

நமது கண்கள் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள். அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் நேத்ரா யோகா செய்வது எப்படி என்று விடியோவும் பதிவிட்டுள்ளார். அதில், கண்களை மேலும் கீழம் அசைப்பது, உருட்டுவது, சிமிட்டுவது என அழகாகச் செய்து காட்டியுள்ளார்.

இந்த விடியோவைப் பார்த்து சில நிமிடங்கள் ஒதுக்கி கண் பயிற்சியை மேற்கொண்டு கண்பார்வையை மேம்படுத்திக் கொள்ளலாமே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.