டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உ.பி.யில் கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

புகழ்பெற்ற கன்வர் யாத்திரைக்கான வருடாந்திர ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டு வருகின்றது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:47 pm

IANS

புகழ்பெற்ற கன்வர் யாத்திரைக்கான வருடாந்திர ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டு வருகின்றது. 

உத்தரகண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கன்வர் யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை தொடங்க உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளை அரசு செய்து வருகின்றது. 

யாத்திரைக்குச் செல்லும் பாதைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் மின்சாரம். சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

கன்வர் யாத்ரா என்பது 'கன்வாரியாஸ்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவன் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கௌமுக் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் நீரைப் பக்தர்கள் எடுத்துச் சென்று நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து தங்கள் உள்ளூர் சிவன் கோயில்களில் காணிக்கையாக எடுத்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து மீரட் மாவட்ட நீதிபதி தீபக் மீனா கூறுகையில், 

பல்வேறு கோயில்களில் கன்வர் யாத்திரை முதல் 'ஜலாபிஷேகம்' வரையிலான நிகழ்ச்சிகளை பிளாஸ்டிக் இல்லாமல் நடத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

யாத்திரைக்கான முழு திட்டத்தையும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யப்படும் என்றார். 

மேலும், கன்வர் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தாபாக்களின் உரிமையாளர்கள், ஒவ்வொரு தாபாவிலும் நியமிக்கப்பட்ட இடத்தில் உணவின் விலைப் பட்டியலை வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.