புகழ்பெற்ற கன்வர் யாத்திரைக்கான வருடாந்திர ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டு வருகின்றது.
உத்தரகண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கன்வர் யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை தொடங்க உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளை அரசு செய்து வருகின்றது.
யாத்திரைக்குச் செல்லும் பாதைகளில் தூய்மை, சுகாதாரம் மற்றும் மின்சாரம். சுத்தமான குடிநீர், கழிப்பறைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கன்வர் யாத்ரா என்பது 'கன்வாரியாஸ்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பக்தர்கள் ஆண்டுதோறும் சிவன் கோயில்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கௌமுக் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் நீரைப் பக்தர்கள் எடுத்துச் சென்று நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து தங்கள் உள்ளூர் சிவன் கோயில்களில் காணிக்கையாக எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து மீரட் மாவட்ட நீதிபதி தீபக் மீனா கூறுகையில்,
பல்வேறு கோயில்களில் கன்வர் யாத்திரை முதல் 'ஜலாபிஷேகம்' வரையிலான நிகழ்ச்சிகளை பிளாஸ்டிக் இல்லாமல் நடத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
யாத்திரைக்கான முழு திட்டத்தையும் பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்யப்படும் என்றார்.
மேலும், கன்வர் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் தாபாக்களின் உரிமையாளர்கள், ஒவ்வொரு தாபாவிலும் நியமிக்கப்பட்ட இடத்தில் உணவின் விலைப் பட்டியலை வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


