தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அக்னிபத் போராட்டம்: நாடு முழுவதும் 529 ரயில் சேவைகள் ரத்து

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறுவதையடுத்து, திங்கள்கிழமை 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

News image
Updated On :20 ஜூன் 2022, 1:29 pm

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெறுவதையடுத்து, திங்கள்கிழமை 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுதப் படையில் ஆள் சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

வட இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக 100-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் மொத்தம் 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

529 ரயில்களில், 181 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 348 பயணிகள் ரயில்கள் ஆகும். 

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளது. 
போராட்டக்காரர்கள் ரயில்களை குறிவைத்து எரித்துள்ளனர். இதன் காரணமாக கடந்த ஐந்து நாள்களாக ரயில்வே துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரயில் மறியல் போரட்டத்தைத் தடுக்கும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.