கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சோனியாவுக்கு என்ன ஆனது? காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத்தொற்று பாதித்து, கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image

சோனியா காந்தி

Updated On :17 ஜூன் 2022, 10:57 am


புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத்தொற்று பாதித்து, கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, அண்மையில் கரோனா பாதித்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. அது தொடர்பான சில மருத்துவ நடைமுறைகளும் நேற்று காலை மேற்கொள்ளப்பட்டன. 

மருத்துவப் பரிசோதனையில், சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில், பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, சோனியா காந்திக்கு கரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பாதிப்புகளுடன் இந்த பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியிருக்கிறது.

கரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்ததன் பேரில், இந்த புதிய அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியது.

முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, சோனியாவின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இதே வழக்கில் அமலாக்கத் துறையின் புதிய அழைப்பாணையின் அடிப்படையில் 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாள்கள் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார்.

சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.