கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது 50 செவிலியர்கள் பாலியல் புகார்: அதிரும் ம.பி.

மத்தியப் பிரதேச மாநிலம் போபலில் இயங்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2022, 12:21 pm


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபலில் இயங்கும் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான ஹமிடியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தையே உலுக்கியிருக்கும் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையமும், இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சரும், ஹமிடியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் மீது பாலியல் புகார் வந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவமனை தரப்பில் இது குறித்துக் கூறுகையில், டாக்டர் தீபக் மீது, 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பாலியல் புகார் கூறியிருப்பதாகவும், குறிப்பாக இரவுப் பணியின்போது அவர் பாலியல் துன்புறுத்தல்களை அளிப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.