கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாஜக செய்யும் பாவத்துக்கு தண்டனை மக்களுக்கா? மம்தா ஆவேசம்

ஹௌரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளே காரணம் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார

News image

பாஜக செய்யும் பாவத்துக்கு தண்டனை மக்களுக்கா? மம்தா ஆவேசம்

Updated On :11 ஜூன் 2022, 10:41 am


கொல்கத்தா: ஹௌரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு சில அரசியல் கட்சிகளே காரணம் என்றும், வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில், இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பாவம் செய்வது பாஜக. ஆனால், அதற்கான தண்டனையை மக்கள் அனுபவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக ஹௌரா பகுதியில் வன்முறை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள்தான் வன்முறையை உருவாக்குகிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.