கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய.. ஜோதிடர் போல ஆரூடம் கூறும் கேஜரிவால்

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று இமாசலப் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

News image

பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய.. ஜோதிடர் போல ஆரூடம் கூறும் கேஜரிவால்

Updated On :11 ஜூன் 2022, 11:28 am


ஷிம்லா: உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று இமாசலப் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

இமாசலப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி அரசு மேற்கொண்ட 1,100 அரசுப் பள்ளித் திட்ட மேம்பாடு மூலம் 16 லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, இமாசலில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8.5 லட்சம் மாணவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

தில்லி அரசு அதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை  கல்விக்காக செலவிட்டிருப்பதாகவும் கேஜரிவால் கூறினார். மேலும், உங்கள் பிள்ளைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அவ்வளவு ஒன்றும் மோசமானவர்கள் இல்லை என்றும் கேஜரிவால் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.