ஷிம்லா: உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று இமாசலப் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
இமாசலப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி அரசு மேற்கொண்ட 1,100 அரசுப் பள்ளித் திட்ட மேம்பாடு மூலம் 16 லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை, இமாசலில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8.5 லட்சம் மாணவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
தில்லி அரசு அதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக செலவிட்டிருப்பதாகவும் கேஜரிவால் கூறினார். மேலும், உங்கள் பிள்ளைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அவ்வளவு ஒன்றும் மோசமானவர்கள் இல்லை என்றும் கேஜரிவால் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


