கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கரோனாவைத் தொடர்ந்து அச்சமூட்டும் புதிய நோய்: கேரளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

கேரள மாநிலத்தில் நோரோ வைரஸ் பாதித்த இரண்டு நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மாநில சுகாதார கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்

News image

கரோனாவைத் தொடர்ந்து அச்சமூட்டும் புதிய நோய்: கேரளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

Updated On :6 ஜூன் 2022, 12:19 pm


புது தில்லி; கேரள மாநிலத்தில் நோரோ வைரஸ் பாதித்த இரண்டு நோயாளிகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மாநில சுகாதார கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வயிற்றுப் பகுதியில் தாக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

நோரோ தீநுண்மி பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுகிறது. எனவே, விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முதல் பாதிப்பு ஆலப்புழாவில் 2021ஆம் ஆண்டு பதிவானது. சுமார் 950 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து சுமார் ஒன்றரை மாதம் நோரோ பாதிப்பு கண்டறியப்பட்டநிலையில், பிறகு கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது ஜூன் மாதம் மீண்டும் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.