டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆந்திரம்: வாயுக் கசிவால் 200 பெண்கள் பாதிப்பு

ஆந்திர மாநிலம் அனகாபல்லே மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
ஆந்திரம்: வாயுக் கசிவால் 200 பெண்கள் பாதிப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:26 am

IANS

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபல்லே மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போரூஸ் ஆய்வுக் கூடத்தை ஒட்டி அமைந்திருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால், அங்கு பணியிலிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.

கண் எரிச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்மோனியம் வாயு கசிவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்த அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.