தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யூடியூப்பில் விடியோ பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனுக்கு சிக்கல்

யூடியூப் பார்த்து வீட்டிலேயே திராட்சைப் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரித்த சிறுவனுக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

News image

யூடியூப்பில் விடியோ பார்த்து ஒயின் தயாரித்த சிறுவனுக்கு சிக்கல்

Updated On :30 ஜூலை 2022, 10:32 am


திருவனந்தபுரம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே திராட்சைப் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரித்த சிறுவனுக்கு மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வீட்டிலேயே ஒயின் தயாரித்து அதனை தனது நண்பர்களுக்குக் கொடுத்த 12 வயது சிறுவனின் நண்பன் ஒருவர், அதனைக் குடித்த சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறுவன் நலமடைந்தார்.

அரசுப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் தனது பெற்றோர் வாங்கி வந்த திராட்சைப் பழத்தைக் கொண்டு, வீட்டிலேயே ஒயின் தயாரித்ததை ஒப்புக் கொண்டான். ஆனால் ஆல்கஹால் போன்ற எதையும் பயன்படுத்தவில்லை என்றும் ஒயின் தயாரித்து, அதனை யூடியூப் விடியோவில் கூறியபடி, பள்ளம் தோண்டி பூமிக்குள் புதைத்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த ஒயின் மாதிரியை ஆய்வகச் சோதனைக்கு அனுப்பியிருக்கும் காவல்துறையினர், அதில் ஆல்கஹால் போன்றவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சிறுவன் செய்த செயலால், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சந்திக்க வேண்டிய சட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.