எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் பலி: அவர்கள் குடித்தது என்ன தெரியுமா?

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த தண்ணீரைக் குடித்த 40 போ் உயிரிழந்தனா்.

News image
கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

PTI

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த தண்ணீரைக் குடித்த 40 போ் உயிரிழந்தனா்.

நேற்று வரை 33 பேர் மரணமடைந்த நிலையில், கடந்த 12  மணி நேரத்தில் மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 40 ஆனது.

பலியானவ்ரகளில் போதாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 31 பேரும், மற்றவர்கள் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சிலா் கள்ளச்சாராயம் குடித்துள்ளனா். அவா்களுக்கு திங்கள்கிழமை காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரிந்தது. அவா்களின் உடல்நிலை மோசமடைந்ததால் போதாட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வரை 40 போ் உயிரிழந்தனா். அவா்களில் 31 போ் போதாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள்; எஞ்சிய 9 போ் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோா் பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. ஜெயேஷ் என்கிற ஆகாஷ், அகமதாபாதில் உள்ள ஒரு கிடங்கில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். அவா் அந்த கிடங்கில் இருந்து 600 லிட்டா் மெத்தனாலை திருடி போதாட் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரான சஞ்சய்க்கு ரூ.40,000-க்கு கடந்த 25-ஆம் தேதி விற்பனை செய்துள்ளாா்.

சஞ்சயிடம் இருந்து சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த வியாபாரிகள் அதை வாங்கிச் சென்றுள்ளனா். அது, தொழிற்சாலைகளில் கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என நன்றாகத் தெரிந்தும் வியாபாரிகளுக்கு சஞ்சய் விற்பனை செய்துள்ளாா். உள்ளூா் வியாபாரிகள் எத்தனாலில் நீா் கலந்து நாட்டுச் சாராயம் எனக் கூறி ஒரு பாக்கெட் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பா்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

உயிரிழந்தவா்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, 14 போ் மீது கொலை செய்தல், விஷம் கொடுத்து துன்புறுத்துதல், குற்றச்சதி என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டுவிட்டனா்.

இதுதவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 போ் கொண்ட குழுவை மாநில உள்துறை அமைத்துள்ளது. அந்தக் குழு 3 நாள்களில் விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.