தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டார் ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 

News image
Updated On :27 ஜூலை 2022, 8:11 am

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 

ஆந்திரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்வர் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

அதன்படி, இன்று கோனசீமா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ப.கன்னவரம் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு படகில் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் நிவாரண திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். 

முன்னதாக, கோதாவரி வெள்ளம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜூலை 16ஆம் தேதி முதல்வர் ரெட்டி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் உயிர்ச் சேதம் ஏற்படாமல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு மணி நேரமும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேற்கு கோதாவரி மற்றும் கோனசீமா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஆந்திரத்தின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிலைமையைத் தீவிரமாக கண்காணிக்கக் காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.