புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்ஹ

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்துள்ளார்.

News image

எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்ஹ

Updated On :26 ஜூலை 2022, 9:06 am


கொல்கத்தா: தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வியடைந்த யஷ்வந்த் சின்ஹ (84), பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நான் தற்போது வரை சுதந்திரமாகவே இருக்கிறேன், எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை என்று தெரிவித்திருக்கும் யஷ்வந்த் சின்ஹ, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக குடியரசுத்தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹ. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்த யஷ்வந்த் சின்ஹ, யாரும் என்னிடம் பேசவில்லை; யாரிடமும் நானும் பேசவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.