எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்ஹ

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்துள்ளார்.

News image
எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்ஹ
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

PTI


கொல்கத்தா: தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வியடைந்த யஷ்வந்த் சின்ஹ (84), பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நான் தற்போது வரை சுதந்திரமாகவே இருக்கிறேன், எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை என்று தெரிவித்திருக்கும் யஷ்வந்த் சின்ஹ, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக குடியரசுத்தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹ. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்த யஷ்வந்த் சின்ஹ, யாரும் என்னிடம் பேசவில்லை; யாரிடமும் நானும் பேசவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.