குவாலியரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.தீனா(23) குவாலியரில் உள்ள ஐஐஐடிஎம்.யில் படித்து வந்தார். இவர் சைதாபாத் பகுதியில் உள்ள நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
பிஜி ரெட்டி சைதாபாத் அருகே உள்ள ஆதர்ஷ் ஹைட்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவந்த தீனா ஐஐஐடிஎம் குவாலியரில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிப்பைத் தொடர்ந்து வந்தார்.
அவர் கேமிங் தொடர்பான 'SeLFlo' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். சேனலுக்கு 29,600 சந்தாதாரர்கள் இருந்தனர்.
தற்கொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தீனா செப்டம்பர் 17, 2015-ன் பழைய விடியோவைப் பதிவேற்றி தற்கொலைக் குறிப்பை ட்வீட் செய்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்| மாணவியின் உடற்கூறாய்வு முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய உத்தரவு
அவர் தனது பதிவில், என் குழந்தைப் பருவத்திலிருந்து இதுவரை நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். உலகத்தைப் பிரிந்து செல்லும் நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து மனஅழுத்தம், சோகம் மற்றும் கோபத்தின் பிடியில் இனியும் என்னால் சிக்கித் தவிக்க முடியாது.
தனது வாழ்க்கை நிறைய அதிர்ச்சிகளால் நிரம்பியதாகவும், சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் எழுதினார். மேலும் தனக்கு முன்னால் பெற்றோர்கள் சண்டையிடுவதைப் பற்றியும், அவர்களிடமிருந்து சரியான வழிகாட்டுதலைப் பெறவில்லை என்றும் அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தீனாவின் தந்தை சந்திரசேகரன் இந்திய ரயில்வேயில் மின்னணு பராமரிப்பு பிரிவில் பணியாளராக உள்ளார். தாய் சங்கரி விஞ்ஞானி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் குடியேறிய தம்பதியருக்கு தீனா ஒரே மகள்.
புதனன்று இரவு வீடு திரும்பியபோது அவரது அறையில் தீனா தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர். மறுநாள் கீழ்த் தளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


