டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லியில் பள்ளி பேருந்தில் தீ விபத்து: 21 குழந்தைகள் உயிர் தப்பினர்

தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News image
கோப்பிலிருந்து..
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

IANS


 
தில்லியின் ரோகிணி பகுதியில் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்ததில் 21 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரோகிணியின் செக்டர் 7-இல் உள்ள சாய்பாபா கோயிலின் அருகே மதியம் 2.15 மணியளவில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 

சம்வ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரார்கள் பால் பாரதி பப்ளிக் பள்ளியின் பேருந்து மற்றும் அடுத்தடுத்து மூன்று கார்களில் தீ பிடித்து எரிவதைக் கண்டு உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் பத்திரமாக உயிர் தப்பினர் என்று தில்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் தெரிவித்துள்ளார். 

மதியம் 2.50 மணியளவில் தீ அணைக்கப்பட்டது, இந்த சம்பவத்தில் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.