தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கர்நாடகத்தில் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ்: 4 பேர் பலி; பதறவைக்கும் விடியோ

சுங்கச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 4 பேரும் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

News image

கர்நாடகத்தில் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸில் 4 பேரும் பலி; பதறவைக்கும் விடியோ

Updated On :21 ஜூலை 2022, 11:05 am

உடுப்பி: கர்நாடக மாநிலம் பைந்தூர் அருகே, அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், சுங்கச்சாவடி அருகே மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 4 பேரும் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் அளவுக்கு இந்த விபத்துக் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.

நோயாளி மற்றும் அவர்களது உறவினர்களுடன் மிக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடுகிறது.

இது குறித்து அறிந்த பைந்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், சாலைத் தடுப்புகளை வேகமாக அகற்றுகிறார்கள். ஆனால் அதற்குள் அந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியைக் கடக்க முயல்கிறது.

வேகமாக வந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடி மீது மோதி சுக்குநூறாக, அதிலிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில், சுங்கச் சாவடி ஊழியர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்துக்காட்சி முழுக்க சுங்கச்சாவடியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சுவாடியின் ஒரு துணில் சென்று இடிப்பதற்கு முன்பு, அது சுழன்ற வேகத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியும் உறவினரும் தூக்கி வீசப்படுகிறார்கள்.  இதில், சுங்கச்சாவடி ஊழியர்களும் படுகாயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.