சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

குஜராத்தில் அதிர்ச்சி: 2 மகள்களை கிணற்றில் வீசிக் கொன்று தந்தை தற்கொலை

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தனது இரண்டு மகள்களைக் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

PTI

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தனது இரண்டு மகள்களைக் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷெராவ் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இறப்பதற்கு முன்பு 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று தாரட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், 

அவர் பகிர்ந்த புகைப்படத்தில் விஷ பாட்டில் ஒன்றும் காணப்பட்டது. 

தர்ஜி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கிணற்றில் வீசியதாகவும், பின்னர் தானும் அந்த விஷத்தை அருந்தி அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் நடந்தபோது அவரது மனைவி வீட்டில் இருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் 3 உடல்களையும் மீட்டனர். மனைவி வீட்டில் இருக்கும்போதே 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.