திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

குஜராத்தில் அதிர்ச்சி: 2 மகள்களை கிணற்றில் வீசிக் கொன்று தந்தை தற்கொலை

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தனது இரண்டு மகள்களைக் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :20 ஜூலை 2022, 6:35 am

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தனது இரண்டு மகள்களைக் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஷெராவ் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இறப்பதற்கு முன்பு 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று தாரட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், 

அவர் பகிர்ந்த புகைப்படத்தில் விஷ பாட்டில் ஒன்றும் காணப்பட்டது. 

தர்ஜி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கிணற்றில் வீசியதாகவும், பின்னர் தானும் அந்த விஷத்தை அருந்தி அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. 

சம்பவம் நடந்தபோது அவரது மனைவி வீட்டில் இருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் 3 உடல்களையும் மீட்டனர். மனைவி வீட்டில் இருக்கும்போதே 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.