தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கர்நாடகத்தில் சாக்லேட் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே ஆறு வயது சிறுமி சாக்லேட் விழுங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2022, 12:46 pm

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே ஆறு வயது சிறுமி சாக்லேட் விழுங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த சிறுமி சமன்வி என அடையாளம் காணப்பட்டுள்ளார். விவேகானந்தா ஆங்கிலவழி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். 

இன்று காலை சிறுமி சமன்வி பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவளைப் பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தினர். சிறுமியின் தாய் சுப்ரிதா புஜாரி அவளை சமாதானப்படுத்த சாக்லேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

பள்ளி வேன் வருவதைப் பார்த்ததும், அவசர அவசரமாக ரேப்பருடன் இருந்த சாக்லேட்டை அப்பயே வாயில் போட்டு விழுங்கியுள்ளார். 

பின்னர், சிறிது நேரத்திலேயே சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பேருந்தின் படிக்கட்டிலேயே மயங்கி விழுந்தாள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சிறுமியை மீட்க முயன்று, உடனடியாக அவளை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

ஆனால், சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.