சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

அனுமதி மறுக்கப்பட்ட தில்லி பெண்: மருத்துவமனைக்கு வெளியே குழந்தையைப் பெற்றெடுத்த அவலம்

தில்லியில் உள்ள மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வெளியே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:50 am

PTI

தலைநகர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வெளியே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

தில்லியில் 30 வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு தகுந்த விளக்கம் அளிக்குமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவமனையிடம் அறிக்கை கோரியுள்ளது. 

திங்கள்கிழமை மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், இரவு முழுவதும் மருத்துவமனைக்கு வெளியே இருந்ததாகவும், சேலையை மறைத்து பிரசவம் பார்த்ததாகவும் பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து துணை ஆணையர் சி.மனோஜ் கூறுகையில், 

காசியாபாத்தின் கேராவில் வசிக்கும் பெண், குழந்தை பிறக்கவிருந்த நேரத்தில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரசவ வலி தாங்கமுடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே அவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

தற்போது அந்த பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் நலமாக உள்ளனர். மகப்பேறு மருத்துவப் பிரிவில் உள்ள மூத்த மருத்துவரின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். 

இதுதொடர்பாக மருத்துவமனைக்கு எதிராக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று அவர் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தில்லி மகளிர் ஆணையமும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜூலை 25-க்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையைக் கோரி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.