தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உ.பி.யில் அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வுக் கட்டணம்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வுக் கட்டணம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

News image
Updated On :19 ஜூலை 2022, 7:12 am

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வுக் கட்டணம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம். பிபிஏ, பிசிஏ, பிஎப்ஏ, பி.எட், பிபிஇஎட், பிஜேஎம்சி, பி.ஒக்கேஷன் ஆகிய பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ (செமஸ்டர்) தேர்வுக்கு ரூ.800 செலுத்த வேண்டும். 

எல்எல்பி, பி.எஸ்சி அக்ரி(ஹானர்ஸ்) எல்எல்பி(ஹானர்ஸ்), பி.டெக், பி.எஸ்சி பயோடெக் படிக்கும் மாணவர்கள், பிடிஎஸ் (நர்ஸிங்), ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கு ரூ.1000 செலுத்து வேண்டும். மேலும் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் ரூ.1,500 செலுத்த வேண்டும். 

இதற்கான சுற்றறிக்கையை உயர் கல்வித்துறை சிறப்புச் செயலாளர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், உத்தரப் பிரதேச அரசின் உயர்கல்வித் துறையின் சிறப்புச் செயலர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் தேசியக் கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவதால், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒரு வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும்.

உத்தரப் பிரதேச மாநில பல்கலைக்கழகங்கள் சட்டம், 1973இன் கீழ் நிறுவப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணங்களில் மாறுபாடுகள் உள்ளன, எனவே அது சரியல்ல என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் உள்ள படிப்புகளில் செமஸ்டர் முறை அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.