புது தில்லி: நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. அதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாகவும், தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி.மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் 736 பேர் (727 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்கள்) வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. அவர்களில் 730 (721 எம்.பி., 9 எம்எல்ஏக்கள்) பேர் வாக்களித்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
மேலும், நாடு முழுவதும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட விருக்கின்றன என்றும் கூறினார்.
இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி சாா்பில் திரௌபதி முா்முவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனா்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 4,800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற நிலையில், இவர்களில் 99.18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் இன்று மாலையே சாலை அல்லது விமானப் போக்குவரத்து மூலம் புது தில்லி கொண்டு செல்லப்படும்.
பதிவான வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதையடுத்து புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


