தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நான் ஒன்றும் குற்றவாளியில்லை: சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

'நான் ஒன்றும் குற்றவாளியில்லை': சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

Updated On :18 ஜூலை 2022, 12:45 pm


புது தில்லி: சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்றும் குற்றவாளியில்லை. இந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து என்னை தடுப்பதற்கு எந்த காரணம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு மேலும் சில பொலிவூட்டும் திட்டங்கள்தான் கிடைக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவரும் வருவதாக உறுதியளித்திருக்கும் நிலையில், தான் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.