சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மேற்குவங்கத்தை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கருப்பு - காய்ச்சல்

மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 பேருக்கு கருப்பு - காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

News image
மேற்குவங்கத்தில் மீண்டும் கருப்பு - காய்ச்சல் (கோப்புப்படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

PTI


கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 11 மாவட்டங்களில் சுமார் 65 பேருக்கு கருப்பு - காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

மாநிலம் முழுவதும் கருப்பு - காய்ச்சல் பரவி வரும்நிலையில், தீவிர கண்காணிப்பில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் குறிப்பாக டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தெற்கு தினாஜ்பூர் மற்றும் கலிம்போங் ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான கருப்பு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கருப்பு காய்ச்சல் நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.

மாநில அரசுக்கு மிகப்பெரிய  தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் கருப்பு காய்ச்சலை மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கணிசமான நேரத்தை செலவிட்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.