சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி: கர்நாடக அரசு 

கர்நாடக மாநிலத்தில் பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்குச் செலுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

PTI

கர்நாடக மாநிலத்தில் பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்குச் செலுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும், 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கழித்து, இரண்டாவது தவணை தடுப்பூசிக்குப் பிறகு இன்று முதல் செப்டம்பர் 30 வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார். 

மாநிலம் முழுவதும் உள்ள 8000 அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், அடுத்த 75 நாள்களில் தகுதியான 4.34 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பு உள்ளது. 

மாவட்ட வாரியாக ஐடி நிறுவனங்கள், தொழிலகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய பணியிடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதோடு வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடப்படுகிறது. 

தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களின் முன்னெச்சரிக்கை அளவைப் பெற்று, கரோனா இல்லாத இந்தியாவுக்காக கைகோர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அனைத்து அரசு கரோனா தடுப்பூசி மையங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.