கர்நாடக மாநிலத்தில் பணியிடத்திலும், வீடு வீடாகச் சென்றும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்குச் செலுத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும், 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கழித்து, இரண்டாவது தவணை தடுப்பூசிக்குப் பிறகு இன்று முதல் செப்டம்பர் 30 வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள 8000 அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், அடுத்த 75 நாள்களில் தகுதியான 4.34 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்| தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்
தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பு உள்ளது.
மாவட்ட வாரியாக ஐடி நிறுவனங்கள், தொழிலகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய பணியிடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதோடு வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களின் முன்னெச்சரிக்கை அளவைப் பெற்று, கரோனா இல்லாத இந்தியாவுக்காக கைகோர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து அரசு கரோனா தடுப்பூசி மையங்களிலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசியை இலவசமாகப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


