ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

குஜராத் கனமழைக்கு 14 பேர் பலி, 31,000 பேர் வெளியேற்றம்

குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். 31,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :13 ஜூலை 2022, 9:42 am

குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். 31,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக கட்ச், நவ்சாரி மற்றும் தாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

51 மாநில நெடுஞ்சாலைகளும், 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த 24 மாணி நேரத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழையினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்ட பணத்திற்காகவும், இதர நிவாரணங்களுக்காகவும் மக்கள் மீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். 

சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு குஜராத்தில் உள்ள கட்ச், பருச், டாங், நவ்சாரி மற்றும் தபி மாவட்டங்களின் பல பகுதிகளில் புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்தது.

கட்ச் மாவட்டத்தின் அஞ்சார், கட்ச் மற்றும் காந்திதாம் தாலுகாக்களில் 212, 197 மற்றும் 171 மிமீ மழையும், தாங்கில் உள்ள வாகையில் 174 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் 25 தாலுகாக்களில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழையைப் பெற்றுள்ளன என்று எஸ்இஓசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.