ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

புதுச்சேரியில் மெல்ல அதிகரிக்கும் கரோனா!

புதுச்சேரியில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :12 ஜூலை 2022, 8:19 am

புதுச்சேரியில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,67,879 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்றைய பாதிப்பில், புதுச்சேரி பகுதியில் மட்டும் 127 பேரும், காரைக்காலில் 32 பேரும், யாணத்தில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஹேவில் எந்தவித புது வழக்குகளும் பதிவாகவில்லை. 

மேலும் நேற்று ஒரேநாளில் 2,492 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார இயக்குனர் ஜி.ஸ்ரீராமலு கூறுகையில், 

கரோனா பாதித்து செயலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்துள்ளன. இதில் மருத்துவமனைகளில் 10 பேரும், வீட்டு தனிமையில் 905 பேரும் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,65,002 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், நேற்று கரோனா உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை. 

மேலும், தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,57,360 ஆகவும், அதில் முதல் டோஸாக 9,73,531 ஆகவும், இரண்டாவது டோஸாக 39,540 ஆகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.