அமர்நாத்தில் சிக்கியுள்ள கன்னடர்களை மீட்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை,
அமர்நாத் யாத்திரையில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பில் பலர் சிக்கியுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் சிக்கியுள்ளனர்.
யாத்திரைக்கு வந்த கர்நாடக பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், கன்னடர்கள் தொடர்பான எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்: தொடர்ந்து உயரும் எரிபொருள்களின் விலை: பிரதமரை விமர்சிக்கும் ராகுல் காந்தி
மேலும், ஜம்மு-காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இதற்காக தொடங்கப்பட்ட உதவி எண்ணில் குறைந்தது 15-20 பயணிகள் வரை தங்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து தகவல் வழங்குவதற்காக எங்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். மீட்புப் பணிகளில் மத்திய அரசு, பிஎஸ்எஃப் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத் தலைமைச் செயலாளர் மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். துயரத்தில் உள்ளவர்கள் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உடனடியாக மீட்க முடியும் என்று பொம்மை கூறினார். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவி எண்களை அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


