புது தில்லி: நாட்டில் தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்பட்டிருக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு தங்கம் இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஜூன் 30ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும்.
நாட்டில் தற்போது திடீரென தங்கம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையானது அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்துள்ளது.
எனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தங்கம் இறக்குமதி வரி உயர்வால், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டில் தங்கம் இறக்குமதி குறையும். இதனாலும் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்கும். அல்லது அதே அளவில் தங்கம் இறக்குமதி நடைபெற்றாலும், அதன் இறக்குமதிக்கு செலவிடப்படும் வரித் தொகையும் அதன் விலையுடன் சேர்ந்து கொள்ளும். இதனாலும் தங்கம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


