கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லியில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் சாகச நிகழ்வு

தில்லியில் குடியரசு நாளையொட்டி 1,000 டிரோன்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்வுகள் நேற்று இரவு நடத்தப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:14 am

DIN

தில்லியில் குடியரசு நாளையொட்டி 1,000 டிரோன்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்வுகள் நேற்று இரவு நடத்தப்பட்டது.

நாட்டின் 73-வது குடியரசு நாள் நேற்று தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக பாசறை திரும்பும் நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

இதில், தில்லி ஐஐடி சார்பில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் தேசிய கொடி, கைத்தடியுடன் காந்தி, மத்திய அரசின் திட்ட இலட்சினை உள்ளிட்ட வடிவங்களை உருவாக்கி சாகச நிகழ்வு நடத்தவுள்ளனர்.

Story image

இதற்கான ஒத்திகை தில்லி விஜய் சவுக் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்டன. இந்த நிகழ்வை பெரும்பாலான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Story image

சீனா, ரஷியா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக 1,000 டிரோன்களை கொண்டு வானில் சாகச நிகழ்வை நடத்தும் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.